Saturday, 27 April 2013

tnpsc tamil

தேத்தங்கால் கண்மாய் - பறவைகள் சரணாலயம ...........................உள்ளது


மாநிலத்தின் மொத்த குடும்பங்களும் குடும்பத்தில் ஒருவராவது வங்கிக் கணக்கு வைத்துள்ள நாட்டின் முதல் மாநிலம்


பகுதி 1 (ஷரத்து 1-4) 
இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) 
இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35)
அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51)
அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 ( ஷரத்து 51 A)
அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151)
மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

பகுதி 6( ஷரத்து 152-237)
மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238)
அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (ஷரத்து 239 -242)
மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 ( ஷரத்து 243)
உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 ஷரத்து 244
THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263)
மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300)
அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( ஷரத்து 301- 307)
இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13( ஷரத்து 308-323)
அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329)
தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342)
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351)
மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360)
அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

பகுதி 19 (ஷரத்து 361-367)
இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (ஷரத்து 368)
இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392)
TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395)
SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார்.

புனைப்பெயர்
தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும்

*இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.

*தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார்.

*முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர்.

*கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

*1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

*1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.

*சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், இராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என்கிற தலைப்பில் ஒரு புதினம்
எழுதினார்.

நா.பார்த்தசாரதியின் புதினங்கள்

1.கபாடபுரம்
2.சாயங்கால மேகங்கள்
3.மணிபல்லவம்
4.ஆன்மாவின் ராகங்கள்
5.குறிஞ்சி மலர்
6.பொன் விலங்கு
7.சாயங்கால மேகங்கள்
8.நிசப்த சங்கீதம்
9.ராணி மங்கம்மாள்
10.சமுதாய வீதி
11.துளசி மாடம்
12.பாண்டிமாதேவி
13.நித்திலவல்லி
14.வஞ்சிமாநகரம்
15.சத்தியவெள்ளம்
16.வெற்றி முழக்கம்


No comments:

Post a Comment